செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே முதியவர் மர்ம மரணம்

Published On 2017-04-10 21:56 IST   |   Update On 2017-04-10 21:56:00 IST
ஜெயங்கொண்டம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டம் அருகே உள்ள  சூரியமணல் கிராமம் ஆர்.எஸ்.பதி  தோப்பில் முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக   ஜெயங்கொண்டம் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.அப்போது அங்கு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.  அவரது காலில் காயம் இருந்தது.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த முதியவரின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை. காலில் காயம் உள்ளதால் யாராவது மர்ம நபர்கள் அடித்துக்கொன்று ஆர்.எஸ்.பதி தோப்பில் தூக்கில் தொங்க விட்டு சென்றனரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News