செய்திகள்

ஆதி திராவிட விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

Published On 2017-04-07 16:54 IST   |   Update On 2017-04-07 16:54:00 IST
ஆதி திராவிட விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

தாட்கோ மூலம் ஆதிதிராவிட விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் ஆதிதிராவிட விவசாயியாக இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்கவேண்டும். மேற்கண்ட நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்கவேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்,

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் விண்ணப்பித்தினை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் பற்றிய விவரங்களுடன் சாதிச்சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று, குடும்ப ஆண்டு வருமானச்சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு பள்ளி மாற்று சான்று, மதிப்பெண் சான்று, வாக்காளர் அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா மற்றும் சிட்டா, அடங்கல் நகல் "அ" பதிவேடு நகல், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டதற்கான நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த இரசீது நகல் மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைபடுபவர்களின் வசதிக்காக அரியலூர் தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் சரவணவேல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News