செய்திகள்

சீர்காழி அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

Published On 2017-03-30 17:30 IST   |   Update On 2017-03-30 17:30:00 IST
சீர்காழி அருகே இளம்பெண் மாயமானது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

சீர்காழி அருகே உள்ள பட்டவிளாகம் அத்தியூரை சேர்ந்த செல்வம் என்பவர் மகள் சந்தியா (வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது தந்தை செல்வம் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடி வருகின்றனர்.

Similar News