செய்திகள்

அரியலூரில் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்பு

Published On 2017-02-14 16:00 IST   |   Update On 2017-02-14 16:00:00 IST
அரியலூரில் உங்களோடு நான் நிகழ்ச்சியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வருகை தந்து மாவட்டத்திலுள்ள அனைத்து தொண்டர்களுடனும் குடும்ப புகைப்படம் எடுத்து கொண்டனர்,
அரியலூர்:

அரியலூர் பி.என்.எம். திருமகள் திருமண மண்டபத்தில் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் உங்களோடு நான் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேருராட்சி, ஊராட்சி, வார்டு கிளை கழக தொண்டர்களும், மகளிரணியினரும் அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்சியில் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், துணை செயலாளர்கள் உமாநாத், ஜாகிர், மாநில கேப்டன் மன்ற செயலாளர் அன்புராஜ், மாவட்ட செயலாளர் இராமஜெயவேல், மாவட்ட துணை செயலாளர் தாமஸ்ஏசுதாஸ், கவியரசன், தெய்வா, தலைமை செயற்குழு உறுப்பினர் எழிலரசன், பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னபாண்டு, ஜேக்கப், ரகுபதி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராணி ஜோசப், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஆனந்த், பாண்டியன், வேல்முருகன், முனியசாமி, மாவட்ட தொண்டரணி நல்லதம்பி, மதி, ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், ராஜேந்திரன், குமாரதேவன், செல்வராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கஜெயபாலன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரவி உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Similar News