செய்திகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் முற்றுகையிடப்படும்: தீபா ஆதரவாளர்கள்

Published On 2017-02-09 16:20 IST   |   Update On 2017-02-09 16:20:00 IST
சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்றால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வீடுகளை முற்றுகையிடுவோம் என்று கடலூரில் நடந்த தீபா ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர்:

கடலூரில் தீபா ஆதரவாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுகுணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஜெயலலிதா இறப்பில் பல சந்தேகங்கள் உள்ளதால் ஜனநாயகம், இறையாண்மையை காத்திட மாநில கவர்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சசிகலா முதல்வராக பதவி ஏற்றால், அந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து, கறுப்பு பேட்ஜ் அணிந்தும், வாயை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது. மக்கள் கருத்துக்கு எதிராக செயல்படும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இதனை வலியுறுத்தி, தேர்தல் அடையாள அட்டை, கட்சி உறுப்பினர் அட்டை நகலுடன் ஜனாதிபதி, இந்திய தேர்தல் ஆணையர், தமிழக கவர்னர் ஆகியோருக்கு மனு அனுப்புவது.

சசிகலா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் வீடுகளை முற்றுகையிடுவது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் மார்க்கெட் ரங்கா, இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News