செய்திகள்

நாகை அருகே பெட்ரோல் விற்ற வாலிபர் கைது

Published On 2016-12-17 16:22 IST   |   Update On 2016-12-17 16:22:00 IST
நாகை அருகே பெட்ரோல் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கீழ்வேளூர்:

நாகையை அடுத்த நாகூர் மெயின் ரோட்டில் நேற்று போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பழைய பெட்ரோல் பங்க் அருகில் அனுமதியின்றி ஒருவர் பெட்ரோல் விற்பது தெரியவந்தது.

அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கீழ்வேளூர் அடுத்த செங்கரை பகுதி மகாதான தெருவை சேர்ந்த பசுபதி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.

Similar News