செய்திகள்

பவானி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி - போலீசார் விசாரணை

Published On 2016-09-26 11:56 GMT   |   Update On 2016-09-26 11:56 GMT
பவானி அருகே காவிரி ஆற்றில் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:

பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூர் மங்கள படி துறை காவிரி ஆற்றில் ஒருவர் இறந்து கிடந்தார். அவருக்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.

ஆற்றில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் மூழ்கி பலியாகி விட்டரா? என்றும் தெரியவில்லை.

இது குறித்து சூரியம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் சித்தோடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News