செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 23-ந்தேதி நடக்கிறது

Published On 2016-09-21 19:05 IST   |   Update On 2016-09-21 19:05:00 IST
அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 23-ந்தேதி நடக்கிறது

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் வருகிற 23-ந்தேதி வருவாய் வட்டாட்சியர் தலைமையில்  நடைபெற உள்ளது.

உடையார்பாளையம் வட்டத்தில் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் நடைபெறுகிறது.

இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.

பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News