செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம்

Published On 2016-09-12 18:50 IST   |   Update On 2016-09-12 18:50:00 IST
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நடந்தது.
ஜெயங்கொண்டம்:

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நடந்தது.

மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், எம்.பி-யு மான ரெங்கராஜன் கலந்துகொண்டு இன்றைய அரசியல் குறித்து சிறப்புரையாற்றினார். 

மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, அழகர்சாமி, இளங்கோவன், கலையரசி, ரமேஷ், துரைசாமி, சிற்றம்பலம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

கூட்டத்தில் ஒன்றிய கமிட்டி செயலாளர்கள் பரமசிவம், கந்தசாமி, வேல்முருகன், புனிதன், தங்கராசு, ஆறுமுகம் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  
முடிவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினர் குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டது. முடிவில் துரைராஜ் நன்றி தெரிவித்தார்.

Similar News