செய்திகள்
அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி
அரியலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் பள்ளி நிர்வாகி உள்பட 2 பேர் பலியானார்கள்.
அரியலூர்:
அரியலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் பள்ளி நிர்வாகி உள்பட 2 பேர் பலியானார்கள்.
அரியலூர் அருகே உள்ள கடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரவேந்தன் (வயது 55). இவர் தனியார் பள்ளி நிர்வாகியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு இவர் அதே ஊரைச்சேர்ந்த தனது நண்பரான கொளஞ்சி (45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சி சென்றனர்.
பின்னர் அங்கு பணியை முடித்துவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கடுக்கூர் பிரிவு சாலையில் திரும்பியபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் வீரவேந்தன், கொளஞ்சி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ரவீந்திர பிரகாஷ் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (31) என்பவரை கைது செய்தார்.
விபத்தில் பள்ளி நிர்வாகியும் அவரது நண்பரும் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் பள்ளி நிர்வாகி உள்பட 2 பேர் பலியானார்கள்.
அரியலூர் அருகே உள்ள கடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரவேந்தன் (வயது 55). இவர் தனியார் பள்ளி நிர்வாகியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு இவர் அதே ஊரைச்சேர்ந்த தனது நண்பரான கொளஞ்சி (45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சி சென்றனர்.
பின்னர் அங்கு பணியை முடித்துவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கடுக்கூர் பிரிவு சாலையில் திரும்பியபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் வீரவேந்தன், கொளஞ்சி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ரவீந்திர பிரகாஷ் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (31) என்பவரை கைது செய்தார்.
விபத்தில் பள்ளி நிர்வாகியும் அவரது நண்பரும் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.