செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது

Published On 2016-04-04 14:15 IST   |   Update On 2016-04-04 14:15:00 IST
ஜெயங்கொண்டம் அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது போலீசார் விசாரணை

தா.பழுர் :

கடலூர் மாவட்டம், கண்டமங்கலம் நடுத் தெருவைச் சேர்ந்த கனகசபை மனைவி செல்வமணி ( வயது 60). இவர் தனது மகள் கவிதாவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கோடங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் முருகன் (36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் முருகன் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்துகொண்டு கவிதாவை அடிக்கடி திட்டி துன்புறுத்தி வந்தாராம். இதனால் கவிதா கணவனிடம் கோபித்துக் கொண்டு கண்டமங்கலத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் செல்வ மணி தனது மகள் கவிதாவை சமாதானம் செய்து கோடங்குடிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது முருகனுக்கும், செல்வமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் முருகன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து செல்வ மணியின் தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு விசாரணை நடத்தி முருகனை கைது செய்தார்.

Similar News