உள்ளூர் செய்திகள்

சேலத்தில் கொரோனாவுக்கு 20 பேர் பாதிப்பு

Published On 2023-05-03 09:26 GMT   |   Update On 2023-05-03 09:26 GMT
  • சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.
  • நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்

பட்டுள்ளது. அதே சமயத்தில் நேற்று 38 பேர் குணமடைந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டனர்.

மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ள வர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனை களிலும், மற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News