உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட லென்ஸ் குமார், அய்யா பிச்சை

வள்ளியூரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2022-12-18 09:09 GMT   |   Update On 2022-12-18 09:09 GMT
  • நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
  • வள்ளியூர் ஐ.எஸ்.ஆர்.ஓ குடியிருப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

வள்ளியூர்:

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வள்ளியூர்

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வள்ளியூர் ஐ.எஸ்.ஆர்.ஓ குடியிருப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரகுமார் தலைமை யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கலுங்கடி பகுதியை சேர்ந்த லென்ஸ் குமார் (வயது 23), ஏர்வாடி சீனிவாசபுரம் அய்யா பிச்சை (21) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் 2 கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? அதனை எங்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News