- மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- தருமபுரி சாலையில் சென்ற போது இருசக்கர வாகனம் மோதி காயம் அடைந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி செம்மடமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் பாலக்குழி பகுதியில் மாத்திரை வாங்க நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு பின்னர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் காலனி பகுதியை சேர்ந்த சியாத் அலி (வயது 60). இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து தருமபுரி விடிவெள்ளி நகர் பகுதியில் வசித்து வந்தார். இவர் பொம்மிடி-தருமபுரி சாலையில் சென்ற போது இருசக்கர வாகனம் மோதி காயம் அடைந்தார்.தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொம்மிடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.