உள்ளூர் செய்திகள்

கோவையில் அடையாளம் தெரியாத 2 பேர் உடல் மீட்பு

Published On 2023-05-25 09:20 GMT   |   Update On 2023-05-25 09:20 GMT
  • மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
  • போலீசார் இறந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் சிறுமுகை பகுதிக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சிக்கதாசம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்த இறந்த ஆண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல பெரியநாயக்கன்பாளையம் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள துணிக்கடை முன்பு 60 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News