உள்ளூர் செய்திகள்

காரைக்கால் திரு.பட்டினத்தில் நகராட்சிக்கு சொந்தமான நீர்த்தேக்க தொட்டியில் இருந்த மோட்டாரை திருடிய 2பேர் கைது

Published On 2023-06-22 07:34 GMT   |   Update On 2023-06-22 07:34 GMT
  • திரு.பட்டினத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
  • குமார் மற்றும் வீரனராஜ் மோட்டார்களை திருடியது தெரியவந்தது.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் அருகே இருந்த விலை உயர்ந்த மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக திரு.பட்டினம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் வீரனராஜ் மோட்டார்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் திரு.பட்டினம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டாரர்களே பறிமுதல் செய்து காரைக்காலில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News