உள்ளூர் செய்திகள் (District)
வடலூர் அருகே போதை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
- சப் -இன்ஸ்பெக்டர் மாசிலமணி மற்றும் போலிசார் கருங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை இருந்தது.
கடலூர்:
வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தரவின்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் மாசிலமணி மற்றும் போலிசார் கருங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விருத்தாசலத்திலிருந்து ேஜாதிராமலிங்கம் மற்றும் அவரது உறவினர் சுந்தரமூர்த்தி உடன் மோட்டார் சைக்கிளில் பொருட்களுடன் கருங்குழியில் உள்ள தனது கடைக்கு வந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரிடம் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை இருந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து ஜோதிராமலிங்கம் மற்றும் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.