உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் சாலை விபத்தில் 2 பேர் பலி

Published On 2023-09-30 14:27 IST   |   Update On 2023-09-30 14:27:00 IST
  • தூத்துக்குடி- நெல்லை பிரதான சாலையை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் வேதநாயகம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
  • இதில் பலத்த காயம் அடைந்த வேதநாயகம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்ய னடைப்பு இந்திராநகரை சேர்ந்தவர் வேதநாயகம் (வயது 78). இவர் நேற்று மாலை அந்தோணி யார்புரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பி உள்ளார்.

அப்போது தூத்துக்குடி- நெல்லை பிரதான சாலையை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த வேதநாயகம் தூத்துக்குடி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தூத்துக்குடி கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் சீனிராஜா. (44). என்பவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். இவர் நேற்று மாலை வேலை முடித்து எட்டையாபுரம் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News