உள்ளூர் செய்திகள்

கோவையில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2022-12-23 09:40 GMT   |   Update On 2022-12-23 09:40 GMT
  • கூலித் தொழிலாளிக்கு கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
  • ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆத்துபொள்ளாச்சியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 30).

கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ்குமார் தினசரி மது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ரமேஷ்குமாரிடம் கோபித்துக்கொண்டு அவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.மனைவி பிரிந்து சென்றதால் மிகுந்த மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துடியலூர் அருகே உள்ள அசோகாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்பாபு (வயது 35). ரெடிமேட் சப்பாத்தி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் தொழில் தேவைக்காக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தினேஷ்பாபு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News