உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேர் கைது

Published On 2023-09-09 07:31 GMT   |   Update On 2023-09-09 07:31 GMT
  • மணலை அள்ளி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
  • ரோந்து போலீசார் மாட்டுவண்டியை மடக்கிப்பிடித்தனர்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யப்பன் (வயது 32), மணிகண்டன் (39). இருவரும் தனித்தனியே மாட்டு வண்டி வைத்துள்ளனர். இவர்கள் ஆற்றில் இருந்து மணலை அள்ளி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, திருக்கோவிலூர் - திருவெண்ணைநல்லூர் சாலையில் இன்று அதிகாலை வந்தனர். அப்போது அவ்வழியே சென்ற ரோந்து போலீசார் மாட்டுவண்டியை மடக்கிப்பிடித்தனர். அய்யப்பன், மணிகண்டன் ஆகியோர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News