உள்ளூர் செய்திகள்

பாளையில் விடுதியில் தங்கி படித்த மாணவிகள் 2 பேர் மாயம்

Published On 2023-09-18 09:05 GMT   |   Update On 2023-09-18 09:05 GMT
  • பாளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் உள்ளன.
  • மாணவிகளின் பெற்றோருக்கு போன் செய்து பள்ளி நிர்வாகம் விசாரித்த நிலையில், அங்கும் மாணவிகள் செல்லவில்லை.

நெல்லை:

பாளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் உள்ளன.

இந்த பள்ளியில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் உள்ளேயே மாணவிகளுக்கான விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விடுதி வார்டன், அங்கு தங்கியிருக்கும் மாணவிகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்று வழக்கம்போல் எண்ணி பார்த்தனர். அப்போது அதில் 2 மாணவிகளை காணவில்லை. அவர்கள் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருவதும், சங்கரன்கோவில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோருக்கு போன் செய்து பள்ளி நிர்வாகம் விசாரித்த நிலையில், அங்கும் மாணவிகள் செல்லவில்லை. இதையடுத்து பாளை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான 2 மாணவிகளையும் தேடி வருகின்றனர். அவர்களை தேடி கண்டுபிடித்த பின்னரே எதற்காக விடுதியை விட்டு வெளியேறினார்கள் என்ற விபரம் தெரியவரும்.

Tags:    

Similar News