உள்ளூர் செய்திகள்

உண்டியல் பணம் திருடிய 2 சிறுவர்கள் சிக்கினர்

Published On 2023-04-05 14:47 IST   |   Update On 2023-04-05 14:47:00 IST
  • மாலை 2 சிறுவர்கள் கோவிலில் உள்ள உண்டிகளில் பணம் திருடி கொண்டு இருந்துள்ளனர்.
  • இதை பார்த்த அந்தப் பகுதி பொது மக்கள் 2 சிறுவர்களையும் பிடித்து வீரகனூர் காவல்துறை யிடம் ஒப்படைத்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே காமராஜ் நகர் மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை 2 சிறுவர்கள் கோவிலில் உள்ள உண்டிகளில் பணம் திருடி கொண்டு இருந்துள்ளனர். இதை பார்த்த அந்தப் பகுதி பொது மக்கள் 2 சிறுவர்களையும் பிடித்து வீரகனூர் காவல்துறை யிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் இரண்டு சிறுவர்களும் வீரகனூர் பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதும் இவர்கள் கோவில் உண்டிகளை உடைக்காமல் குச்சிகளை பயன்படுத்தி உண்டியலில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து இரண்டு சிறுவர்களிடம் வீரக னூர் காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News