உள்ளூர் செய்திகள்
டிப்பர் லாரியை திருடிய 2 பேர் கைது
- 2 பேர் திருடியதாக பாகலூர் போலீசில் புகார் கொடுத்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்டம், ஓமலூர் செங்கரபு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது39). இவரது டிப்பர் லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி நரிப்புரம் பகுதியை சேர்ந்த முருகேசன், ஓசூர் தும்மனப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 2 பேர் திருடியதாக பாகலூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், சனமங்கலம் வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.