உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய 2 பேர் கைது

Published On 2023-08-02 15:15 IST   |   Update On 2023-08-02 15:15:00 IST
  • மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 60 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10,000- என்று கூறப்படுகிறது.
  • குட்கா பொருட்களை மோட்டர் சைக்கிளுடன் போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 60 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10,000- என்று கூறப்படுகிறது.

மேலும் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் (வயது29) மற்றும் மகிபால் சிங் (27) ஆகிய இருவரும் விற்பனைக்காக சேலத்திற்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, குட்கா பொருட்களை மோட்டர் சைக்கிளுடன் போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News