உள்ளூர் செய்திகள்

கோவையில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

Published On 2023-03-26 14:45 IST   |   Update On 2023-03-26 14:45:00 IST
  • தேரம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக காரமடை இன்ஸ்பெக்டர் குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
  • 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே காரமடை தேரம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக காரமடை இன்ஸ்பெக்டர் குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹீம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தேரம்பாளையம் பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் பையுடன் 2 பேரை நின்றிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த மனோ ரஞ்சன்தாஸ்(29), ரிஷிகேஷ் தாஸ்(24) என்பதும்,கூலி தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் போதிய வருமானம் இன்றி கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

Tags:    

Similar News