உள்ளூர் செய்திகள்
சரவணம்பட்டி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
- தனியார் கல்லூரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது
- 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை,
கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள மைதானத்தில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் கோவை நல்லாம்பாளையத்தில் தங்கி வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர சுவைன் (வயது29), மிதுன் நாயக் (34) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.