உள்ளூர் செய்திகள்
- போலீசார் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் நேற்று ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் நேற்று ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜலகண்டீஸ்வரன் (வயது 23), மணிரத்தினம்(21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.