உள்ளூர் செய்திகள்

கிணத்துக்கடவு அருகே வியாபாரி வீட்டில் 13 பவுன் நகை- ரூ.1½ லட்சம் கொள்ளை

Published On 2023-07-09 09:07 GMT   |   Update On 2023-07-09 09:07 GMT
  • சம்பவத்தன்று முகமது ஜாபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
  • தவுலத் நிஷா கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.

கோவை,

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள முஸ்லிம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் முகமது ஜாபர். கயிறு வியாபாரி. இவரது மனைவி தவுலத் நிஷா(வயது 55).

கடந்த 3-ந் தேதி இவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டி விட்டு கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

அங்கு முகமது ஜாபர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். தவுலத் நிஷா கணவருடன் இருந்து அவரை கவனித்து வந்தார்.

சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கம்மல் உள்பட 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

கணவருக்கு உடைகள் எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து தவுலத் நிஷா கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட னர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிகிச்சைக்கு சென்ற கயிறு வியாபாரி வீட்டில் 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News