உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு

Published On 2022-07-04 09:40 GMT   |   Update On 2022-07-04 09:40 GMT
  • பாடகசாலை கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 60 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
  • பணியாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக புகார்

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் விஷ்ணு தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

பாளை யூனியன் திருவேங்கடநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்.

திருவேங்கடநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாடகசாலை கிராமத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். இங்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 60 பேர் வேலை செய்து வருகிறோம்.

எங்கள் பகுதியில் இருந்து காலையில் 7.30 மணிக்கு வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு செல்வதற்குள் தாமதமாகி விடுகிறது. அப்போது பணியாளர்களுக்கும் எங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

எனவே எங்கள் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இடங்களில் எங்களுக்கு வேலை செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Tags:    

Similar News