உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 2 பேர் சாவு

Published On 2023-08-08 15:22 IST   |   Update On 2023-08-08 15:22:00 IST
  • மோட்டார் சைக்கிளில் வந்தபோது திடீரென்று வண்டி கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
  • வண்டியை ஓட்டி சென்ற மனோகர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் என்கிற மனோஜ் (வயது36).

இவர் சம்பவத் தன்று தனது மோட்டார் சைக்கிளில் அஞ்செட்டி-தேன்கனிக் கோட்டை சாலையில் சென்றார். அப்போது அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அஜீத் (36) என்பவரும் சென்றார்.

இருவரும் மேடம்மத்திகிரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது திடீரென்று வண்டி கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வண்டியை ஓட்டி சென்ற மனோகர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த அஜீத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக் கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதோபோன்று கிருஷ்ண கிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சந்திரப்பட்டியைச் சேர்ந்தவர் தரணி (30). இவர் கடந்த 5-ந் தேதி ஆனங்கூர்-கல்லாவி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து சரிந்து விழுந்தது. இதில் வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த தரணி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News