செய்திகள்
லாரி ஸ்டிரைக்குக்கு தீர்வு காணவேண்டும்- மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #LorryStrike
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆகவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என்றும், தமிழக முதல்- அமைச்சர் ‘வழக்கம் போல்’ நமக்கென்ன என்று இருந்து விடாமல், அவர்களை அழைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #LorryStrike
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 தினங்களாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #LorryStrike