செய்திகள்
கோப்புப்படம்

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் தொகுதிகளில் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறாது- சீமான்

Published On 2018-06-19 08:22 GMT   |   Update On 2018-06-19 08:22 GMT
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று சீமான் கூறினார். #Seeman #18MLAs #ADMK
மதுரை:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசை ஆதரிக்கவில்லை என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்திருப்பது ஜனநாயக படுகொலை ஆகும்.

தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் அந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தட்டும். அப்படி தேர்தல் வந்தால் எடப்பாடி அணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.

தமிழக அரசு வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளை நிலமற்ற அகதிகளாக மாற்ற முயற்சி செய்கிறது. தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது.

சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டம் முட்டாள்தனமான ஒன்று. இதனால் தான் எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.


தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாக உடனடி நடவடிக்கை எடுத்த அரசாங்கம், எஸ்.வி. சேகர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? இது பாரபட்சமான செயல்பாடாகும்.

தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று வரை கைது செய்து வருவது பெரிய அடக்குமுறை ஆகும்.

தமிழகத்தில் நேர்மையற்ற ஆட்சி நடக்கிறது. போராட்டத்தை முடக்க நினைப்பது சர்வாதிகாரம் ஆகும். தமிழிசைக்கு எதிராக கருத்து சொன்னால் கைது செய்கிறார்கள். இதுவே பெண்களுக்கு எதிராக கருத்து சொல்பவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறார்கள். தமிழகத் தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman #18MLAs
Tags:    

Similar News