செய்திகள்

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2018-06-18 13:09 IST   |   Update On 2018-06-18 13:09:00 IST
ஸ்டாலின் முதல்வராக வர வாய்ப்பே இல்லை என்றும் மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #sellurraju #MKStalin
மதுரை:

முன்னாள் அமைச்சர் கக்கனின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.  

இதையொட்டி மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டியிலுள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் வீரராகவராவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-


தமிழகத்திற்கு ஆபத்து என்று ஸ்டாலின் கூறுவது எல்லாம் ஜோக் ஆகத்தான் எடுத்துக்கொள்ளமுடியும். ஊடகங்கள் மூலம் அவர் தன்னை வெளிப்படுத்துவதற்காக ஏதாவது கருத்தை சொல்லி வருகிறார்.

அவர் நினைப்பது போன்று குறுக்கு வழியில் அவர் முதல்வராக வர வாய்ப்பே இல்லை. மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் போட்டிப்போட்டு தொகுதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்கின்றனர். ஆகவே ஸ்டாலினோ அல்லது அவரது தந்தையோ வந்தால் கூட இந்த ஆட்சியை அசைக்க முடியாது.

சேலம், சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தெளிவாக  எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. நிலம் எவ்வளவு ஏக்கர் எடுக்கபோகிறோம்  என்பதை முதல்வர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த திட்டம் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்க கூடியதை  தடுக்கும் வகையில் தமிழ் விரோதிகள், தமிழன துரோகிகள் தூண்டிவிடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #sellurraju #DMK #MKStalin
Tags:    

Similar News