செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

Published On 2018-06-14 07:51 GMT   |   Update On 2018-06-14 07:51 GMT
18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். #edappadiPalanisamy #18mlas

சென்னை:

முதல்- அமைச்சர் பழனிசாமி இன்று அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல் டி.டி.வி. தினகரனும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். #edappadiPalanisamy #18mlas

Tags:    

Similar News