செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம்- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2018-05-23 15:01 IST   |   Update On 2018-05-23 15:01:00 IST
தூத்துக்குடியில் கலவரம் வரும் என்பதை போலீசார் முன் கூட்டியே அறிந்து தடுக்க தவறி விட்டதாகவும் இதில் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #Thoothukudifiring
பொள்ளாச்சி:

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் பல நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கலவரம் நடந்துள்ளது.

கலவரம் வரும் என்பதை போலீசார் முன் கூட்டியே அறிந்து தடுக்க தவறி விட்டனர். இதில் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்து உள்ளது.

ஆர்ப்பாட்டம், போராட்டத்தை முறைப்படுத்தி இருந்தால் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம், இது தடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.


துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கு பாரதிய ஜனதா செயற்குழுவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு, வேலை வாய்ப்பை விரைந்து வழங்க வேண்டும்.

போராட்டத்தை தூண்டும் அமைப்புகள், இயக்கங்களை கண்டறிந்து ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் இதுமாதிரி கலவரம் வெடிக்கும்.

போராட்டத்தால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது. அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #Thoothukudifiring
Tags:    

Similar News