செய்திகள்

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் வெளியிட வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

Published On 2017-09-23 13:48 IST   |   Update On 2017-09-23 13:48:00 IST
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சி.சி.டி.வி கேமராவில் பதிவான வீடியோவை தினகரன் வெளியிட வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
கடலூர்:

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சி.சி.டி.வி கேமராவில் பதிவான வீடியோவை தினகரன் வெளியிட வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பஸ் நிலையம் எதிரே புதியதாக மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடலூருக்கு இன்று மதியம் வந்தார்.

அப்போது அவரிடம் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வீடியோ எங்களிடம் உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவோம் என்று டி.டி.வி.தினகரன் கூறியதை பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு சி.சி.டி.வி கேமராவில் பதிவான வீடியோவை வைத்து அவர்கள் பூஜையா செய்யப்போகிறார்கள். அதை வெளியிட வேண்டியது தானே என ஆவேசத்துடன் அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கூறினார்.

Similar News