லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான தக்காளி பூரி

Published On 2019-01-21 09:42 GMT   |   Update On 2019-01-21 09:42 GMT
வித விதமான பூரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து சூப்பரான ருசியான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்
தக்காளி - 4
காய்ந்த மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு



செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெந்நீரில் ப.மிளகாய், தக்காளியை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் ஆறியதும் தோலூரித்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய் விழுது, நெய், உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பின்னர் மாவை பூரிகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து ருசிக்கவும்.

சூப்பரான தக்காளி பூரி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News