சமையல்

செட்டிநாடு ஸ்டைல் காளான் குருமா

Published On 2022-07-01 09:18 GMT   |   Update On 2022-07-01 09:18 GMT
  • காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
  • காளான் எளிதில் செரிமானமாவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது.

தேவையான பொருட்கள் :

பட்டன் காளான் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செட்டிநாடு மசாலா வறுத்து அரைப்பதற்கு :

வர மிளகாய் - 4

தனியா - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பொட்டுக்கடலை - 1/2 மேஜைக்கரண்டி

துருவிய தேங்காய் - 1 கைப்பிடி

கசகசா - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப )

தாளிப்பதற்க்கு :

எண்ணெய் - தேவையான அளவு

பிரியாணி இலை - 1

பட்டை - 1/2 அளவு

கிராம்பு - 2

ஏலக்காய் - 1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பில்லை - 2 கொத்து

செய்முறை :

* சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* காளானை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வத்து வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.

* சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும். இது தான் செட்டிநாடு மசாலா.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

* இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

* இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.

* காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 - 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும்.

* குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

* காளான் வேக வெகு நேரம் ஆகாது. 15 நிமிடங்களே போதுமானது.

* இப்போது சூப்பரான செட்டிநாடு காளான் குருமா ரெடி.

குறிப்பு : இந்த குருமா செய்வதற்கு சின்ன வெங்காயம் உபயோகிக்கவும், பெரிய வெங்காயம் தவிர்க்கவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வறுக்கவும்.

Tags:    

Similar News