சமையல்

கத்திரிக்காயில் சூப்பரான பிரியாணி செய்யலாம்...

Published On 2023-02-12 06:12 GMT   |   Update On 2023-02-12 06:12 GMT
  • கத்தரிக்காயில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும்.
  • இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்,

பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ,

சின்ன வெங்காயம் - ஒரு கப்,

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

புளித்தண்ணீர் - 2 கப்,

தக்காளிச் சாறு - கால் கப்,

கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க

பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம்- சிறிதளவு

அரைக்க :

காய்ந்த மிளகாய் - 5,

தனியா - ஒரு டீஸ்பூன்,

வெந்தயம் - அரை டீஸ்பூன்,

கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,

சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை :

* சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கத்திரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

* பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

* வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் போடு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்...

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

* அடுத்து அதில் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

* புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

Tags:    

Similar News