லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை உப்புமா

Published On 2018-06-04 03:58 GMT   |   Update On 2018-06-04 03:58 GMT
காலை வேளையில் வேகமாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஏதேனும் சமைக்க வேண்டுமென்றால், அதற்கு போதுமை ரவை உப்புமா மிகவும் சிறந்ததாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
வரமிளகாய் - 2
இஞ்சி - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி தட்டி வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.

பிறகு அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து, சிறிது நேரம் மூடி போட்டு வேக வைக்கவும்.

பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News