பொது மருத்துவம்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் எதனால்....?

Published On 2023-12-27 05:59 GMT   |   Update On 2023-12-27 05:59 GMT
  • மருந்துகளால் மலச்சிக்கல் உண்டாகலாம்.
  • பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் என்பது ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறுவது அல்லது மிகவும் உலர்ந்தும், வலியுடனும் வெளியேறுவதாகும். சர்க்கரை நோயாளிகளில் 60 சதவீதம் பேர் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கியகாரணம் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் போது ஏற்படும் குடற்பாதை நரம்புகளின் பாதிப்பாகும்.

மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு, நீரிழிவு நோய்க்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளாலோ (டாப்பாகிளப்லோ சின் போன்ற எஸ்.ஜி. எல்.டி2 இன்ஹிபிட்டர்ஸ்) அல்லது கூடுதலாக உள்ள இதய நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளாலோ மலச்சிக்கல் உண்டாகலாம். (புரூஸிமைடு, கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகள்). புரூப்பன், ஆஸ்பிரின், ஒபியாட்ஸ் போன்ற வலி நிவாரண மருந்துகள் உட்கொள்பவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

மலச்சிக்கலுக்கு தீர்வாக சர்க்கரை நோயாளி கள் நார்ச்சத்து அதிகமாக உள்ள பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கு நீர் வறட்சி காரணம் என்பதால் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மைதா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மலச்சிக்கலுக்காக மலமிளக்கி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

Tags:    

Similar News