பொது மருத்துவம்

பூசணி விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது

Published On 2024-01-28 12:11 IST   |   Update On 2024-01-28 12:11:00 IST
  • காய்கறி மற்றும் பழசாலட்களுக்கு அருமையான சேர்க்கை.
  • மசாலா சேர்த்து அப்படியே வறுத்தும் சாப்பிடலாம்.

* கஞ்சி அல்லது சூப்களில் சேர்த்து பருகலாம்.

* தயிர் அல்லது தானியங்களுடன் சேர்க்கலாம்.

* காய்கறி மற்றும் பழசாலட்களுக்கு அருமையான சேர்க்கை.

* சிக்கன் உணவுகள் அல்லது பாஸ்தாக்கள் போன்ற எந்த உணவையும் அலங்கரிக்கலாம்.

* ஹம்முஸ், பெஸ்டோ அல்லது குவாக்காமோல் போன்ற மற்ற பொருட்களுடன் சேர்த்து உண்ணலாம்.

* குக்கி மற்றும் ரொட்டி மாவில் கலந்து சமைக்கலாம்.

* மசாலா சேர்த்து அப்படியே வறுத்தும் சாப்பிடலாம். பூசணி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்

* பூசணி விதைகளை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுவலி, வாயுத்தொல்லை, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படும்.

* இதிலுள்ள முக்கிய தீமை என்னவென்றால், அவற்றில் கலோரிகள் நிறைந்திருப்பதால், அவற்றை அதிகமாக சாப்பிடுவது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

* பூசணி விதைகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இந்த விதைகளை நீரிழிவு நோயாளிகள் மருந்து மற்றும் ரத்த சர்க்கரைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் மிதமாக உட்கொள்ள வேண்டும்.

பூசணி விதை கீர்

தேவையான பொருட்கள்:

பூசணி விதை – 1 கப்,

சர்க்கரை – 1 ½ கப்,

பால் – ½ லிட்டர்.

செய்முறை:

பூசணி விதையை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு நன்கு கழுவி, தண்ணீரை வடித்து தனியே வைக்கவும். ஊறவைத்த பூசணி விதைகளை சிறிது பால் சேர்த்து நன்கு மிருதுவாக அரைக்க வேண்டும். ஒரு கடாயில் அரைத்த பூசணி விதை விழுது, மீதமுள்ள பால், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும். பாயசம் கொதித்து நுரை வரும் வரை குறைந்த வெப்பத்தில் வேகவைக்கவும். பிறகு பரிமாறவும்.

Tags:    

Similar News