வழிபாடு
வைகாசி விசாகம் அன்று பாட வேண்டிய பாடல்
- குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள்.
- வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.
கைவீசும் குழந்தையிலே
கனிகேட்ட வேலவனே!
பொய்பேசும் உலகத்தில்
புகழ்பேச வைத்திடுவாய்!
நெய் தீபம் ஏற்றி
நேரில் உனை வழிபட்டோம்!
வைகாசி விசாகமன்று
வரம் தருவாய் கந்த வேலனே
இப்படி பாடுங்கள், முருகனின் அருளுக்கு பாத்திரமாகலாம்.