திருப்பதி கோவிலில் நாளை முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேக உற்சவம்
- திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- இன்று இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.
முதல் நாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையானுக்கு ஹோமம், அபிஷேகம், பஞ்சாமிர்த திருமஞ்சனம் நடக்கிறது.
பின்னர் சாமிக்கு வஜ்ரகவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடக்கிறது.
2-வது நாள் உற்சவர் ஏழுமலையானுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு வீதி உலா நடக்கிறது.
3-வது நாள் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்பட்டு உற்சவர் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மாட வீதிகளில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.
4-வது நாள் கல்யாணம் உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
தோமாலை மற்றும் அர்ச்சனை சேவைகள் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 80,284 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34,096 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.