search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jyeshtabhishekam"

    • இன்று திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை பொதுஜன சேவை நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு காவிரி ஆற்றுக்கு யானை மீது வெள்ளிக்குடம் வைத்து திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டது. யானையை பின் தொடர்ந்து கோவில் பட்டர்களும் குடத்தில் புனித நீரை காலை 9.30 மணிக்கு கொண்டு வந்தனர்.

    காலை 10 மணிக்கு கமலவல்லி நாச்சியார் தாயார் அங்கில்கள், நகைகளை ஒப்படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாச்சியார் தாயாரின் ஆபரணங்கள் சுத்தம் செய்யப்பட்டு மாலை 3 மணிக்கு கோவில் ஊழியரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை.

    இன்று (சனிக்கிழமை) திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு திருமடப்பள்ளியில் இருந்து தளிகை எடுத்தலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும் நடைபெறும். காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படும். காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை பொதுஜன சேவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    • சனிக்கிழமை திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறும்.
    • திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் இருந்து நாளை காலை 7 மணிக்கு காவிரி ஆற்றுக்கு வெள்ளிக்குடம் எடுத்துச்செல்லப்படும். காலை 8 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலம் புறப்படும். காலை 9.30 மணிக்கு புனிதநீர் கோவிலை வந்தடையும். காலை 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தல், அங்கில் சுத்தம் செய்து திரும்ப ஒப்புவித்தல் பகல் 3 மணிக்கு நடைபெறும். மாலை 5 மணிக்கு மங்களஆரத்தி நடைபெறும்.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி காலை 7 மணிக்கு திருமடப்பள்ளியில் இருந்து தளிகை எடுத்தலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும் நடைபெறும். காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படும். காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • மங்கள ஆரத்தி நடைபெற்றது.
    • திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதியும், ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 7-ந் தேதியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

    பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெற்றது.

    இதேபோன்று ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவானைக்காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் நேற்று காலை ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலட்சுமி தாயார், உற்சவர்லட்சுமிநரசிம்மன் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

    பின்னர் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலட்சுமி தாயார், உற்சவர் லட்சுமிநரசிம்மன் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.

    • யானை மீது தங்கக்குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
    • முதல் தைலக்காப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

    பின்னர் காவிரி ஆற்றில் 1 தங்கக்குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீரை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும், 28 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் அம்மா மண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு காலை 9.15 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கு காலை 9.30 மணியளவில் திருமஞ்சனம் நடைபெற்றது. மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு, தொண்டைமான் மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் சிறு பழுதுகள் செப்பனிடப்பட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டு மாலை 4 மணிக்கு ஒப்புவிக்கப்பட்டது.

    ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதல் தைலக்காப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது.

    இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டன. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாளான இன்று (திங்கட்கிழமை) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டு, அந்த சாதம் பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை ஆகியவற்றை முன்னிட்டு நேற்று முழுவதும் மற்றும் இன்று மாலை வரை மூலஸ்தான சேவைக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • உற்சவா்களுக்கு கவச பிரதிஷ்டை, ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று உற்சவா்களுக்கு கவச பிரதிஷ்டை, ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி முத்துக்கவசம் அணிவித்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நிகழ்ச்சியில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாமிக்கு கவசம் அணிவித்து சிறப்புப்பூஜை செய்து, கவச்சாதிவாசம் நடந்தது.
    • சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 3 நாட்கள் நடக்கும் ஜேஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ர பாதத்தில் சாமி எழுந்தருளல், கைங்கர்யங்கள், மகாசாந்தி ஹோமம் நடந்தது.

    கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சாமிக்கு கவசம் அணிவித்து சிறப்புப்பூஜை செய்து, கவச்சாதிவாசம் நடந்தது. மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நிகழ்ச்சியில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை கவச பிரதிஷ்டை நடக்கிறது.
    • ஞாயிற்றுக்கிழமை கவச சமர்ப்பணம் நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 2-ந்தேதி வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்கக் கவசங்களை எடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை சுத்தம் செய்து தங்க முலாம் பூசி மீண்டும் உற்சவர்களுக்கு அணிவிப்பது ஜேஷ்டாபிஷேகம் ஆகும்.

    அதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கவச்சாதி வாசமும், நாளை (சனிக்கிழமை) கவச பிரதிஷ்டை, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கவச சமர்ப்பணம் நடக்கிறது. விழாவையொட்டி 3 நாட்களுக்கு காலை மகாசாந்தி ஹோமம், புண்யாஹவச்சனம், காலை 10 மணிக்கு உற்சவர்களான சாமி, தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மதியம் ஷடகலச ஸ்தாபனம், மாலை சாமி வீதி உலா நடக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதத்தில் வரும் ஜேஷ்டா நட்சத்திரத்தின் தொடக்கத்தில் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • உற்சவர்களுக்கு தங்கக் கவசங்கள் அணிவித்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
    • இத்துடன் 3 நாள் ஜேஷ்டாபிஷேகம் நிறைவடைந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வந்தது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமியை கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்துக்குக் கொண்டு வந்தனர்.

    அங்கு அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்ய மகாசாந்தி ஹோமம், சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம், அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பித்தனர். அதன் பிறகு உற்சவர்களுக்கு தங்கக் கவசங்கள் அணிவித்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.

    மாலை சஹஸ்ர தீபலங்கார சேவையின்போது உற்சவர்கள் தங்கக் கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இத்துடன் 3 நாள் ஜேஷ்டாபிஷேகம் நிறைவடைந்தது.

    • மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
    • ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே முத்துக் கவசம் அலங்காரம் நடைபெறும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் சம்பங்கி பிரகாரத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு காலை 8 மணியளவில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பாராயணம் செய்பவர்கள் மகாசாந்தி ஹோமம் நடத்தினர். பின்னர் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    மாலை மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. சஹஸ்ர தீபலங்கார சேவையில் மலையப்பசாமி பங்கேற்றார். மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை உற்சவர் மலையப்பசாமி முத்துக்கவசம் அணிந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே முத்துக் கவசம் அணிந்த மலையப்பசாமியின் அழகை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    • 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.
    • இன்று முத்துக் கவசத்தில் உபயநாச்சியார்களுடன் மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் ஜோஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது. அதையொட்டி கோவிலின் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் காலை, மாலை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதன் ஒரு பகுதியாக காலை யாகசாலையில் ருத்விக்குகள் சாந்தி ஹோமம் நடத்தினர். சத கலச பிரதிஷ்டை, ஆராதனை நடத்தினர். பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு நவ கலச பிரதிஷ்டை, ஆவாஹனம், கங்கண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    வேத பண்டிதர்கள் ஸ்ரீசூக்தம், பூசூக்தம், புருஷ சூக்தம், நிலா சூக்தம், நாராயண சூக்தம் பாராயணம் செய்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூேதவி, மலையப்பசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு வஜ்ர கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. சஹஸ்ர தீபலங்கார சேவை முடிந்ததும் உற்சவர்கள் வஜ்ர கவசத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ஜேஷ்டாபிஷேகத்தின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) முத்துக் கவசத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தங்கக் கவசத்திலும் உபயநாச்சியார்களுடன் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    • திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • இன்று இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.

    முதல் நாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையானுக்கு ஹோமம், அபிஷேகம், பஞ்சாமிர்த திருமஞ்சனம் நடக்கிறது.

    பின்னர் சாமிக்கு வஜ்ரகவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடக்கிறது.

    2-வது நாள் உற்சவர் ஏழுமலையானுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு வீதி உலா நடக்கிறது.

    3-வது நாள் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்பட்டு உற்சவர் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மாட வீதிகளில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.

    4-வது நாள் கல்யாணம் உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தோமாலை மற்றும் அர்ச்சனை சேவைகள் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 80,284 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34,096 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • புண்டரீகாட்ச பெருமாள், பங்கஜவல்லி தாயாருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    இதையொட்டி, நேற்று காலை ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இருந்து ஒரு தங்க குடம் மற்றும் 17 வெள்ளி குடங்களில் புனித நீர் யானை மீது வைத்து கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து திருவெள்ளறை குதிரை மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

    அங்கு புண்டரீகாட்ச பெருமாள் மற்றும் பங்கஜவல்லி தாயாருக்கு புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×