வழிபாடு

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா 12-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-03-10 07:53 GMT   |   Update On 2023-03-10 07:53 GMT
  • தெப்ப உற்சவம் 17-ந்தேதி நடக்கிறது.
  • 18-ந்தேதி தீர்த்தவாரி தெப்ப உற்சவம் நடக்கிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் 16-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் சேர்ந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைகிறார். மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி முடிய அலங்காரம் அமுது செய்து தீர்த்த கோஷ்டி நடக்கிறது. அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட தெப்பதேரில் தாயார் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வருகிறார். இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேருகிறார்.

இதை தொடர்ந்து 18-ந்தேதி தீர்த்தவாரி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதில் மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்படுகிறார். மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் சேருகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News