தெய்வ சக்தி வீட்டில் நிலைத்திருக்க வேண்டுமா...?
- தென்மேற்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும்.
- எதிர்மறை ஆற்றல் அனைத்தையுமே இந்த இரண்டு காய்களும் ஈர்த்துக்கொள்ளும்.
தெய்வ அம்சம் வீட்டில் நிறைந்திருக்க வீட்டிற்குள் எதிர்மறை சக்திகளான பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை, ஆவி சேட்டைகள் நீங்கி தெய்வ சக்திகள் வீட்டில் குடியேற வெள்ளை பூசணிக்காய் ஒன்று, மஞ்சள் பூசணிக்காய் ஒன்று வாங்கி மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அதில் வெள்ளை பூசணிக்காயை உங்களுடைய வீட்டின் வடகிழக்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும். மஞ்சள் பூசணிக்காயை தென்மேற்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும்.
ஆமாவாசை அன்று இந்த இரண்டு காய்களையும் வாங்கி உங்கள் வீட்டில் வைக்கலாம். அல்லது ஞாயிற்றுக்கிழமை வாங்கி வைக்கலாம். நீங்கள் வைத்த நாட்களில் இருந்து 30 நாட்கள் உங்களுடைய வீட்டில் வைத்திருந்து அதன்பிறகு 30 நாட்கள் கழித்து இந்த காய்களை எடுத்து யாருடைய கண்களுக்கும் தெரியாமல் ஒரு பையில் வைத்து காட்டுப்பகுதிக்கு சென்று போட்டுவிட வேண்டும்.
இவ்வாறு செய்வதன்மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தையுமே இந்த இரண்டு காய்களும் ஈர்த்துக்கொள்ளும். உங்கள் வீடு சுத்தப்படுத்தப்படும். கெட்ட சக்திகள், கெட்ட எண்ணங்கள் வெளியேறிய பிறகு நல்ல சக்திகள், இறைசக்திகள் வீட்டினுள் குடியேறும்