வழிபாடு

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பவித்ரோற்சவம்

Published On 2022-10-22 06:28 GMT   |   Update On 2022-10-22 06:28 GMT
  • உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடத்தப்பட்டது.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி அதிகாலை மூலவரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, கொலுவு, பஞ்சாங்க சிரவணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன் பிறகு பவித்ர பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரரை கல்யாண மண்டபத்துக்குக் கொண்டு வந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 6.30 வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடத்தப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News