search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srinivasamangapuram Kalyana Venkateswara Swamy Temple"

    • 15-ந்தேதி கருடசேவை நடக்கிறது.
    • 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி 10-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் வெளியீட்டு விழா திருப்பதியில் தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் உள்ள இணை அதிகாரியின் அறையில் நடந்தது. இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டிகளை வெளியிட்டார்.

    இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை பெரிய அளவில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 11-ந்தேதி கொடியேற்றம், 15-ந்தேதி கருடசேவை, 16-ந்தேதி தங்கத் தேர், 18-ந்தேதி தேரோட்டம், 19-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவைகள் நடக்கிறது.

    அப்போது தேவஸ்தான சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • 17-ந்தேதியில் இருந்து ஜனவரி 14-ந்தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஜனவரி 2-ம்தேதி வைகுண்ட வாசல் திறக்கப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு 17-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16-ந்தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் தொடங்குகிறது. அன்று மாலை முதலே கோவிலில் மார்கழி மாத கைங்கர்யம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து தினமும் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6 மணி வரை பக்தர்களுக்கு மார்கழி மாத தரிசனம் வழங்கப்படுகிறது. காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை நித்ய கல்யாண உற்சவம் நடக்கிறது. மார்கழி மாத வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை மார்கழி மாத கைங்கர்யம், மூலவர்களுக்கு அபிஷேகம், காலை 9.15 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி மாதம் 2-ம்தேதி அதிகாலையில் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக இலவச தரிசன பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் ஆன்மிக மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடத்தப்பட்டது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி அதிகாலை மூலவரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, கொலுவு, பஞ்சாங்க சிரவணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன் பிறகு பவித்ர பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரரை கல்யாண மண்டபத்துக்குக் கொண்டு வந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 6.30 வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடத்தப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது.
    • 23-ந்தேதி இரவு பவித்ர பூர்ணாஹூதியோடு வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது. கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அனைத்துப் பூஜைகளும், திருவிழாக்களிலும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

    அதையொட்டி பவித்ரோற்சவ நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டி வெளியீட்டு விழா திருமலையில் உள்ள தேவஸ்தான இணை அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. அதில் இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டியை வெளியிட்டார்.

    20-ந்தேதி மாலை பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம். 21-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 22-ந்தேதி மூலவர், உற்சவர், விமான பிரகாரம், கொடிகம்பம், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய சன்னதிகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. 23-ந்தேதி இரவு பவித்ர பூர்ணாஹூதியோடு வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 12 வேத பண்டிதர்கள் உலக மக்கள் நன்மைக்காக பாஷ்ய பாராயணம் செய்கிறார்கள்.
    • புதிய நடைமுறை மற்றும் பாரம்பரியத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

    வாமன ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் 7-ந்தேதி பாஷ்ய பாராயணத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. சங்கராச்சாரியாரின் அத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் மற்றும் ஸ்ரீமத்வாச்சாரியாரின் அத்வைதம் மற்றும் லட்சுமி விசிஷ்டாத்வைதம் ஆகிய வைகானச மரபில் தேர்ச்சி பெற்ற 12 வேத பண்டிதர்கள் உலக மக்கள் நன்மைக்காக பாஷ்ய பாராயணம் செய்கிறார்கள்.

    உபநிடத மந்திரங்களுக்கு இசைவாக பாஷ்ய பாராயணத்தை நடத்தும் புதிய நடைமுறை மற்றும் பாரம்பரியத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகர் ஆச்சாரியார் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சாரியார் இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மேற்கண்ட நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ×