வழிபாடு

நவநீதகிருஷ்ணன் கோவிலில் ஜெயந்தி உற்சவ விழா

Published On 2023-09-12 06:02 GMT   |   Update On 2023-09-12 06:02 GMT
  • ஜெயந்தி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
  • வெண்ணை தாழி கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

உடுமலை பெரியகடை வீதியில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஜெயந்தி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விழாவின் 5- வது நாளான நேற்று வெண்ணை தாழி கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். இந்த நிகழ்வுக்காக கோவில் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

அதைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. இதில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு பெரியதிருமொழி, திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் உள்ளிட்ட பாடல்களை பாடி வெண்ணை தாழி அலங்காரத்தில் எழுந்தருளிய கண்ணனை சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News